பிரான்ஸ் நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றம்

பிரான்ஸ் இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரின் நகரசபையினால் 08.04.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தில்,
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், தமிழினப்படுகொலை செய்த சிறீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம்தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் என்பன உள்ளிட்ட  பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்றி-சூர்-சென் நகரசபை முதல்வர், நகரசபை பிரதி முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.