பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்

தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த நபர் சூடான்நாட்டைச் சேர்ந்தவர்  என அறியவருகிறது.இதுவரை தாக்குதலுக்கான காரணம் அறியப்படவில்லை.