பாராளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஸ்ரீஜயவர்த்தனபுர பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழ்நிலையால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்ததே. இருந்தும் தேர்தலை நடத்த முடியாது விட்டால், பாராளுமன்றத்தை கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.