சிறீலங்கா அரச பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியின் வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை ஒன்றை சரிசெய்ய முற்பட்டபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பகுதி சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்தில் இருந்து ஆணையாளர் சந்திரரட்னா பலேகமவும் ஏனைய பயணிகளும் காயங்களின்றி தப்பியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.