பல்கலை மோதல் விவகாரம் தொடர்பில் விசாரிக்கத் தனி நபர் ஆயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காகத் தனிநபர் விசாரணைக்கான நியமனம் இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை கூடிய விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் எம். நடராஜசுந்தரம் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகப் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.