பல்கலைக்கழக மாணவர்களுக்காக அனுமதிகளைப் பெறும் பணிகள் நாளைமுதல் ஆரம்பம்

2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நாளைமுதல் ஆரம்பமாக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் எனவும் விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டி நூல் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.