பராமரிப்பின்றியிருந்த வயல்நிலங்களில் விவசாயம் செய்யும் நடவடிக்கை.

கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்’ நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் நாடு பூராகவும்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வானது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் செட்டிகுளம் கம நலசேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் அருவித் தோட்டம் பகுதியில் சிறப்பாகஇடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், வவுனியா நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் கே.இமாஷலன், திணைக்கள உத்தியோகத்தர்கள்,கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு கைவிடப்பட்ட நிலத்தில் பயிற்செய்கை நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.