நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுபகுதியில் கஞ்சாசெடிகள்
பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று அதிரடி படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகியநாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்திறகும் மேற்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

வவுனியாவில் இருந்து சென்ற விசேட அதிரடிப்படையினரே குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் கைப்பற்றபட்ட கஞ்சா செடிகளை போகஸ்வெவ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

jkjk நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

viber image 2020 02 12 05 14 14 நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.