நியூயோர்க்கில் நான்கு பேர் சுட்டுப் படுகொலை மூவர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உளு்ள புரூக்ளின் பகுதியில் இன்று (12) சில மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்பவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.