நாகவிகாரைக்குள் கொரோனா? நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு பி.சி.ஆர்.!

நயினாதீவு நாகவிகாரைப் பணிக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு நேற்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நயினாதீவின் நாக விகாரையை சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாக அப்பகுதியை அளவீடு செய்வதற்குச் சென்றவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்தே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விகாராதிபதி உள்ளிட்ட இரு பெளத்த பிக்குகள், 9 கடற்படையினர் உட்பட 27 பேரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே நயினாதீவில் நடத்தத் திட்டமிடப்படும் தேசிய வெசாக் தினம் தொடர்பான தீர்மானம் எட்டப்படலாம் எனத் தற்போது தெரியவருகின்றது.

நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேறு இன்றைய தினமே வெளிவரும் எனவும் தெரியவருகின்றது.