இலங்கையில் நேற்று மாத்திரம் 19 பேர் பலி! ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்று மட்டும் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரண எண்ணிக்கையாகும்.

அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.