இலங்கையில் நேற்று மட்டும் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரண எண்ணிக்கையாகும்.
அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.