நல்லூர் கந்தனின் தேரோட்டம் ரத்தாகுமா?

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் உற்சவம்  எதிர்வரும் 06.08.2019அன்று ஆரம்பிக்கப்பட்டு, தேர்த் திருவிழா 29.08.2019 அன்று நடைபெற இருக்கும் நிலையில்,  தேர் உற்சவத்தின் போது தேர் வெளிவீதி உலா வராது என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதேவேளை உள்வீதியில் சிறிய தேர் உலாவரும் எனவும் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கோயிலுக்குள் பிரவேசிக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பரிசோதனைக்கு அப்பால் அனுமதிக்கப்படுவர் என்றும், கோயில் வளாகத்தில் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலுள்ள இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவிற்காகவே வருகை  தருவதுண்டு. அவர்களுக்கு இம்முறை திருவிழா ஏமாற்றத்தை தருமா? அல்லது இறுதி நேரத்தில் முடிவுகள் மாற்றப்பட்டு தேர் வெளிவீதி உலா வருமா என்பது முருகனுக்கு மட்டுமே தெரியும்.