தொடரும் துயரம்- மகனைத்தேடி வந்த தந்தை மரணம்

வவுனியாவில் காணாமல் போன தனது மகனை தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.  

வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி வயது63 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.   இவரது மகன் செல்வநாதன் வயது 40 கடந்த 2007 ஆம் ஆண்டு தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் போது வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.
IMG 0498 தொடரும் துயரம்- மகனைத்தேடி வந்த தந்தை மரணம்
அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.