தேர்தல்களை இலக்கு வைத்து புதிய இடதுசாரி கூட்டணி?

vasu udya wimal தேர்தல்களை இலக்கு வைத்து புதிய இடதுசாரி கூட்டணி?இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட தரப்பினர் இணைந்தே இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் எனவும், தயாசிறி ஜயசேகரவும் இதில் இணையவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே இக்கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இடதுசாரி கூட்டணியாக மே தினத்தை நடத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. விமல் தரப்பின் மே தினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நபரொருவரை ஆதரிப்பதா அல்லது தமது அணியில் ஒருவரை களமிறக்குவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும், விஜயதாச ராஜபக்ஷவை இடதுசாரி கூட்டணியில் களமிறக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.