திரு நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் லண்டனில் 26 ஏப்ரல் காலமானார். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக தாயகத்தையும் தமிழீழ விடுதலையையும் நேசித்த அவர் கடந்த ஒரு சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
மத்திய கிழக்கில் வேலை பார்த்த காலம் முதல் தாயக விடுதலைக்காக பணியாற்றி வந்தார். எமது தேசிய விடுதலை அமைப்பைப் பலப்படுத்தும் பணிகளிலும் தமிழர் புனர்வாழ்வுப் பணிகளிலும், Hotspring சஞ்சிகையிலும் அவர் பணியாற்றி இருந்தார்.
எம்மவர்கள் யாருடனும் இலகுவில் தன்னை அறிமுகம் செய்து உரையாடும் இயல்பான பண்பைக் கொண்டிருந்த அவர் வயது முதிர்வு நிலையிலும் தாயகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.
லண்டன் குறொய்டன் பகுதியில் வசித்து வந்த அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.