தெரிவுக்குழு பற்றிய சிறீலங்கா சபாநாயகரின் அறிக்கை

தெரிவுக் குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது எமது நோக்கமல்ல என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுவினர் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் சென்றடைவதை தடுக்கவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட அறிக்கையே இதுவாகும்.