தென்னிலங்கையில் 21 தொழில் நிறுவனங்கள் மூடல்

தென்னிலங்கையின் பொரலுகொட பகுதியில் அமைந்துள்ள 21 நிறுவனங்கள் கொரோனா அச்சத்தால் இன்று (1) மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைகளுக்கு அண்மையில் அமைந்துள்ள உணவுச் சாலையின் மேற்பார்வையாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய் உள்ளது உறுதிப்பட்டதனால் 21 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 350 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு நோய்கான சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.