தென்னிலங்கையில் மேலும் ஒரு ஊடகவியலாளர் பலி

கொழும்பில் இருந்து வெளிவரும் த ஜலன்ட் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் உயிரிழந்த நிலையில் கொழும்பு – பெலவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து ஜனாசாவாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர் ஒருவர் ஜப்பாரின் வீட்டிற்கு சென்ற போதே அவர் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் உயிரிழந்து சில நாட்களாகி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .