தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அச்சுறுத்தல் – தமிழக விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு

இலங்கையின் மத அடிப்படைவாதிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இந்தியாவில், தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல் குவைடா, ஐ.எஸ்.ஐ.எஸ் உட்பட 11 தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டதையடுத்தே இவ்வாறான அச்சுறுத்தல் இருப்பது உணரப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த அமைப்புக்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.