திருகோணமலை கத்தோலிக்க மறைக் கல்வி நடு நிலையத்தினால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவேந்தல் நிகழ்வு நேற்று  (18) திருகோணமலை கத்தோலிக்க மறைக் கல்வி நடு நிலையத்தில் இடம் பெற்றது.

IMG 1621386914506 திருகோணமலை கத்தோலிக்க மறைக் கல்வி நடு நிலையத்தினால் நினைவேந்தல் நிகழ்வு

சமூக அபிவிருத்தி கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமி பிள்ளை ரொபேர்ட், மதுராங்கன் குரூஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஸ்ரீஞானேந்திரன் ஆகியோர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தியுடனான ஒளிச்சுடரேற்றி உணர்வு பூர்வமான முறையில் அஞ்சலி செலுத்தினர்.

IMG 1621386909885 திருகோணமலை கத்தோலிக்க மறைக் கல்வி நடு நிலையத்தினால் நினைவேந்தல் நிகழ்வு

இதில் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உணவுக்காக பகிரப்பட்ட கஞ்சியினை நினைவு கோரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இதன் போது பகிரப்பட்டன.