திருகோணமலையில் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

திருகோணமலை மாவட்ட செயலகத்தின்  திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் கல்வி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டமானது நேற்று (08) புனித மரியாள் கல்லூரியில் நடைபெற்றது.

இத்தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டமானது க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்கால தொழில் முயற்சிகள், ஏனைய உயர்கல்வி வாய்ப்புகள்,  வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் சவால்கள்,  தொடர்பான பல விடயங்கள் இதன்போது வளவாளர்களினால் தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி க.மதுரன், மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி திருமதி ஜெசினா பௌமி மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.