திருகோணமலையில் கடாட்சம் நூல் வெளியீடு

IMG 20240320 WA0033 திருகோணமலையில் கடாட்சம் நூல் வெளியீடுசம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஒமுங்கமைப்பில் ” கடாட்சம்” நூல் வெளியீடும் இலக்கியப் பணிக்கான பாராட்டு நிகழ்வும் 29 -03-2024 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு திருகோணமலை பொது நூலக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இவ் நிகழ்வு சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் தலைவர் மருத்துவர் அ . சதீஸ்குமார் தலைமையில் நடைபெறும்.

மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, நூல் நயவுரை, நூல் வெளியீடு, கருத்துரைகள், பாராட்டு நிகழ்வு என்பனவும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.