திடீர் உடல் நலக் கோளாறு: ராஜித வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு சம்பந்தமாக அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு வழங்கியிருந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாரென தெரிகிறது.

இதற்கிடையில் ராஜிதவை கைது செய்ய அனுமதி கோரி சி ஐ டி சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டது.