திடீர் உடல்நலக்குறைவு 24 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக புலமைப் பரிசில் வகுப்பு பாடசாலையில் மாலை நடைபெற்றது.

இதன்போது அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒவ்வாமை காரணமாக உடல் சோர்வுற்று சிலர் மயக்கமடைந்தனர், சிலர் சோர்வுற்ற நிலையில் காணப்பட்டனர்.

இந்நிலையில் பாதிப்புக்குள்ளான 24 மாணவர்களையும் மாமடு வைத்தியசாலையில் பாடசாலை நிர்வாகத்தினர் அனுமதித்தனர்.

அங்கிருந்து அம் மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 24 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், ஒவ்வாமைக்கான காரணம் குறித்து ஆராய்வதாக சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் பாடசாலைக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.