தாய்லாந்தில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கைது

தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டின் பாங்காக் நகரில் 19 ரோஹிங்கியா அகதிகளையும் அவர்களுக்கு வீடு வழங்கியாக அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் இரண்டாவது அலை கொரோனா பரவல் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டும் வரும் சூழலில் இக்கைது தாய்லாந்து- மியான்மர் இடையே இருக்கும் ஆட்கடத்தல் பாதைகள் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.