தான்சானியா அதிபரின் இறுதி சடங்கு – கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

தான்சானியா நாட்டின் ஜனாதிபதி  ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி காலமானார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. இதன்போது, ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.  இதன் போது கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர்.