தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இன்று(06) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்படி குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.