தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்! அச்சத்தின் மத்தியில் தமிழர்கள்

இரத்தினபுரி − எஹலியகொட தமிழ் வித்தியாலயத்தின் பெயர் பலகை சிதைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 5 மணியளவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இனம் தெரியாத சில நபர்கள் அடாத்தாக பாடசாலைக்குள் நுழைந்து பெயர் பலகையை அடித்து உடைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அண்மையில் பாணந்துறை பகுதியிலுள்ள சுசந்த மாவத்தை, வத்தளையில் கெரவலப்பிட்டி என்ற பெயரும், நீர்கொழும்பில் உள்ள டி குரூஸ் என்ற தமிழ் பெயரும் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.