தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்

தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளும், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. 
IMG 805ce78ebf2d9cbf8c3e3a7e4cb04aeb V தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்
இதில் ஜெனிவா அமர்வு தொடர்பாகவும், தமிழ்த்தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
IMG 983320e1d286a2e045592d168e48b468 V தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்
கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராயா, எம். ஏ.சுமந்திரன்,
ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
IMG 459a1c5802250431425eaea51a41d6f5 V தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்
வினோநோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,
  IMG 546c48170137c415edb839cf41ffcac1 V தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்
யாழ் மாவட்ட ஆயர் , திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்மறை மாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.