Home செய்திகள் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்

தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளும், வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. 
IMG 805ce78ebf2d9cbf8c3e3a7e4cb04aeb V தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் வவுனியாவில் ஆரம்பம்
இதில் ஜெனிவா அமர்வு தொடர்பாகவும், தமிழ்த்தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராயா, எம். ஏ.சுமந்திரன்,
ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
வினோநோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,
 
யாழ் மாவட்ட ஆயர் , திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மன்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்மறை மாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம், தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர் அடிகளார், திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Exit mobile version