தமிழ்த் தேசிய துக்க தினமான இன்றைய தினம் பிரகடனம் – 18 அமைப்புக்கள் அழைப்பு

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப்ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால்தமிழ் தேசியத்திற்கு ஆற்றியசேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று திங்கட்கிழமை தமிழ்தேசிய துக்க தினமாகப் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தொடக்கம் வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் வரையிலான 18அமைப்புகள் வேண்டுகொள்விடுத்தள்ளன.

இதற்கு தமிழ்தேசிய கட்சிகள் பொதுமக்கள் அனைவரும் ஆதரவுவழங்குவதுடன் இன்று திங்கட்கிழமை அனைவரும் தங்களின்வீடுகளிலும் பொது இடங்களிலும் வணிக நிலையங்களிலும் கறுப்புகொடிகளை பறக்கவிட்டும் உங்கள்உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும்துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ள்ளப்பட்டுள்ளனர்.

“தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்துதேசியத்தின் பால் ஓங்கிஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது . 2009 ம் ஆண்டுயுத்தம் மெளனிக்கபட்ட பின்தமிழர் தேசம் திக்கற்றவர்களாகநின்ற நேரம் அவர்களுக்குநம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையைபல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும்பொது வெளியிலும் சர்வதேசத்திலும்அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின்நீதி குரலாக சாட்சியாகஇருந்த மிகப்பெரும் ஆளுமையைநாம் இன்று இழந்துநிற்கின்றோம்” என இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடகஅறிக்கையில் இவ்வமைப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு வெண்மயில் அமைப்பு மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மட்டக்களப்பு சடோ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம் தமிழர் நலன் காப்பகம் மட்டக்களப்பு சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மட்டக்களப்பு புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு திருகோணமலை குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு உலக தமிழர் மாணவர் ஒன்றியம் இராவண சேனை திருகோணமலை வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் ஆகிய 18அமைப்பகளே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளன.