தமிழ்த் தேசத்தை அழிப்போருக்கு இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்கு தள்ளிச் சென்றவர்களுக்கு இந்தத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் ஊடாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம். போர் முடிவடைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அமைத்து 10 வருடங்கள் கழிந்துள்ளன. இந்த 10 வருடங்களில் நாங்கள் தமிழ் மக்களுக்கு பல கருத்துக்களைக் கூறி வந்துள்ளோம்.

குறிப்பாக தமிழ்த் தேசத்துக்கு வரப்போதும் ஆபத்துக்கள் தொடர்பான முன்கூட்டியே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமிழ் தேசத்துக்கான ஆபத்துக்கள் தொடர்பில் நாங்கள் கூறிவந்த அத்தனை கருத்துக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை புதிய தலைமைத்துவம் தமிழ்த் தேசத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

அதை கடந்த 10 வருடங்களாகச் சொல்லிவந்தோம். இதனை இன்று மக்களும் தாங்களாகவே அனுபவ ரீதியான முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்துள்ளார்கள். அந்த புதிய தலைமைத்துவத்தை நேர்மையாகவும், கொள்கை ரீதியாக இறுக்கமாகவும், தூய்மையாகவும் வழங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராள்ளது.

இந்தவகையில் எமது கட்சியின் வேட்பாளர்கள் தமிழ்த் தேசத்தின் 5 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றார்கள். அந்த
அனைத்து மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்
கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எம்மை பொறுத்து
வரை இந்தத் தேர்தல் புதிய ஓர் ஆரம்பமாக இருக்
கும்.

தமிழ்த் தேசம் கடந்த 10 வருடங்களாக சரியான
தலைமைத்துவம் இல்லாமல், பிழையான வழிக்கு
தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலின் முடிவு
கள் அந்த பிழையான தலைமைத்துவத்துக்கு ஒரு
முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான, உறுதியான, தமிழ்
தேசத்தில் நலன்கள் சார்ந்து புதிய பாதை ஒன்றுக்கு
வழிவகுக்கும்.

அந்தப் புதிய பாதைக்கான தலைமையை நாங்கள் கொடுப்போம். இதற்கான முன்கூட்டிய தமிழ்
மக்களுக்கு நன்றி கூறிக் கொள்ளுகின்றோம்” என்றார்.