கொரோனா தாக்கம் இருக்கும் வரை தேர்தல் பரப்புரை இல்லை: சுமந்திரன்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை நாடாளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை எந்தத் தேர்தல் பரப்புரைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு வைக்கையளித்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ். தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனாவைரஸ் பரவும் அபாயம் காரணமாகப் பொது மக்களின் பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதி,தேர்தலைப்பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம். பொதுமக்களின் பாதுகாப்புத்தான் எங்கள் அதிஉச்சக் கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்கவேண்டுமாக இருந்தால் ஜனநாயகப் பண்பியல்புகள் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுயாதீனமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும்.மக்கள் பரப்புரைக் கூட்டங்க ளுக்குச் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்கவேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியைத் தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பல கட்சிகள் தேர்தலைப் பிற்போடுமறு கோரியுள்ளன.

வேட்புமனுக் காலம் நீடிக்கப்படாத காரணத்தினால் நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒருசூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம். இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்திவைப்போம். பொதுமக்கள் கூடும் சூழ்நிலைகளை ங்கள் தவிர்ப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும்பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலைசரியான நிலைமைக்குதிரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது” என்றார்.­