தந்தையின் படுகொலைக்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும்-மகள் செய்னப்

ஈரான் இராணுவத் தளபதியைக் கொலை செய்த அமெரிக்கா இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும் என கொல்லப்பட்ட இராணுவத் தளபதியின் மகள் செய்னப் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்லாயிரக்கக்கான மக்கள் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டுபேசிய சோலைமானியின் மகள் தனது தந்தையின் படுகொலைக்கு பழிவாங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியும் தளபதி சுலைமானின் கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்குவதாக கூறியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி சுலைமானின் இறுதிக் கிரியைகள் இன்று (06) தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பல்லாயிரம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்