டெல்லியில்  ஓக்சிஜன் சிலிண்டர்கள்  மறைத்து வைத்திருந்த நபர் கைது

இந்தியாவில்  கொரோனா தொற்றுக்குள்ளாகும் மனித உயிர்களைக் காப்பாற்ற போதிய ஓக்சிஜன் கிடைக்காத நிலையில், 48 சிலிண்டர்களை   டெல்லியில் அவரது வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் மேற்கு டெல்லியின் தஸ்ரத் புரி பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் இந்த சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், மேற்கொண்டு விசாரணைகள் நடப்பதாகவும் டெல்லி காவல்துறை கூறியுள்ளது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.