டிரோன்களை செயலிழக்கச் செய்யும் கதிர்வீச்சு துப்பாக்கி அறிமுகம்

அவுஸ்திரேலியாவில் உரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் புதிய நவீன துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் கதிர் வீச்சுக்களை பயன்படுத்துகின்றது.

தடை செய்யப்பட்ட இடங்களைப் படம் பிடிப்பது, சிறியரக குண்டுகள் மூலம் தாக்குதுல் நடத்துவது என டிரோன்களின் பயன்பாடு தவறான வழிக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவே இந்த கதிர்வீச்சு துப்பாக்கிகள் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துப்பாக்கி மூலம் 10 ஆயிரம் அடி தூரத்தில் வரும் டிரோனையும் குறிபார்த்து, பின்அதன் மீது துப்பாக்கி மூலம் ஒளிக்கற்றையை செலுத்த முடியுமு். இந்த ஒஒளிக்கற்றைகள் அனுப்பப்பட்டவுடன் அது கீழே விழுந்து விடும். டிரோன்களால் ஏற்படும் பாதிப்புகள் அவுஸ்திரேலியாவில் அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த நவின ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.