ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக அனைவரும் அணி திரளவேண்டும் – அஸ்கிரியபீட தேரர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு கட்சி தொடர்பும் இல்லாமல் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் அணி திரளவேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர், வரகாகொட சிறிஞானரத்ன மகா நாயக்க தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நாம் ஒரு நாடாக ஒன்று படாதமையினால் தான் எங்களுக்கு எதிரான சக்திகள் பயனடைகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அரசாங்கமாக நாங்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது குறித்து பொதுமக்களுக்கு பொதுவான புரிதல் இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.