ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வடபகுதி தமிழ் மக்களின் போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா மற்றும் சஜித் பிரேமதாசாவின் வாக்குகளை புறக்கணிப்போம் எனத் தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 978ஆவது நாளாக காணாமல் போனோரின் உறவினர்களால் சுழற்சி முறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன், தமிழர்கள் போர்க் குற்றவாளியை விரும்பினால்,  வெள்ளைவான் வேண்டும் என்றால், துரோகிகள் டக்ளஸ், கருணாவை விரும்பினால் கோத்தபயாவிற்கு வாக்களியுங்கள். தமிழ் தாயகத்தில் புத்தமும் சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள ராஜ்ஜிய என்று கூறப்படும் ஒற்றையாட்சியையும் விரும்பினால், சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களியுங்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vavunia 1 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வடபகுதி தமிழ் மக்களின் போராட்டம்