செட்டிகுளம் பகுதியில் குடும்ப உறுப்பினர் காணாமல் போனதாக தகவல்

செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தந்தையான இராமையா நல்லநாதனை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். இரு நாட்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரின் மனைவி செட்டிகுளம்  காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள  காவல்துறை நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

தொலைபேசி இலக்கம்- 0766975067