கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பற்றி எரிந்ததில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு சென்ற 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு கலிபோர்னியா அருகே சான்டாகுரூஸ்((Santa Cruz)) தீவில் ஆழ்கடல் நீச்சல் செய்வ தற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தநிலையில் கரையோரம் நிறுத்தப்பட்டி ருந்த அவர்கள் படகு நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் சிக்கி 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 9 பேர் தேடப்பட்டு வருகின்றனர். படகில் இருந்த ஊழியர்கள் 6 பேரில் 5 பேர் கடலில் குதித்து நீச்சல் அடித்து அருகில் இருந்த மீன்பிடி கப்பலில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில் சாண்டா குரூஸ் தீவுக்கு அருகே லாஸ் ஏஞ்சல்சுக்கு வடமேற்கே 145 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கரையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் கடல்நீரில் மூழ்கிய நிலையில் இருந்த படகில் 5 பேர் உயிரிழந்த நிலை கண்டுபிடிக்கப்பட்டாலும் மோசமானநிலையில் உடல்கள் இருந்ததால் மீட்கப்பட வில்லை. காணாமல் போனவர்கள் குறித்தும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசார ணை நடந்து வருகிறது.