சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் – செஹான் சேம­சிங்க

ஜனா­தி­பதித் தேர்­தலின் வெற்­றிக்­காக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ. சுமந்­தி­ர­னுடன் செய்து கொண்ட நிபந்­த­னை­ அடிப்­ப­டை­யி­லான ஒப்­பந்­தத்­தினை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என  எதிரணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க கேட்டுள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று  வியா­ழக்­ கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர்  அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்,

பொது­ஜன பெர­மு­னவின் வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மக்கள் ஆணை­யை தம்மால் பெற முடி­யாது  என்­பதை அறிந்தே ஐக்­கிய தேசியக் கட்சி இன்று பல முறை­யற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது. எந்த  சூழ்ச்­சி­களை முன்­னெ­டுத்­தாலும் பொது­ஜன பெர­மு­னவின் வெற்­றியை எவ­ராலும் தடுக்க முடி­யாது.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி, அரசசார்­பற்ற அமைப்­புகள் மற்றும் மேற்­கு­லக நாடுகள் ஆகி­யன  இணைந்து முன்­னெ­டுத்த அர­சியல் சூழ்ச்­சிகள் தற்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

வடக்கு மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களின் தேவை­களை நிறை­வேற்றிய அர­சாங்கம் வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரையில் தீர்வை முன்­வைக்­க­வில்லை.

எதிர்வரும் 16ஆம் திகதி பலாலி  விமான நிலையம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.  பலாலி விமான நிலையம் சர்­வதேச விமான நிலை­ய­மாக திறந்து வைக்கும் அளவுக்கு  அங்கு  எவ்­வித அபி­வி­ருத்திப் பணி­களும் முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அத்­துடன் சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்­கான சான்­றி­த­ழையும் பெற்றுக் கொள்­ள­வில்லை. இவ்­வா­றான குறை­பா­டு­களின் மத்­தியில்  தேர்தல் வெற்­றியை கருத்திற் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும் அர­சாங்­கத்­துடன் இணைந்து வடக்கு தமிழ் மக்­களை ஏமாற்­று­கின்­றார்கள். தாமரை கோபுரம் பிர­மாண்­ட­மாக திறக்­கப்­பட்டு மக்கள் பாவ­னைக்கு அனு­ம­திக்­காமல் உள்­ளதை போன்றே பலாலி விமான நிலை­யமும் பய­னற்­ற­தாக காணப்­படும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க வழங்­கிய வாக்­கு­று­திகள் இது­வரை காலமும் நிறை­வேற்­ற­வில்லை. ஆகவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எவ்­வித விட்டுக் கொடுப்­புக்­க­ளுக்கும் இடம் கிடை­யாது என்று ஆரம்­பத்தில் அழுத்­த­மாக கருத்­து­ரைத்த கூட்­ட­மைப்­பினர் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்கும் நிலைப்­பாட்டில் உள்­ளார்கள்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் வெற்­றி­யை கருத்திற் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம்  என்ன,  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஐக்கிய தேசி யக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிந்துள்ளார்.