சுகாதார வழிகாட்டல்களுடன் வாக்களிப்பது எப்படி? ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான ஒத்திகை

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை நிகழ்வு எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தகவலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுத் தேர்தல் வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகிறது” என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.