சீல் வைத்து மூடப்பட்டது கொக்குவில் ரயில் நிலையம் – புகையிரத நிலைய அதிபரும் கைது

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபரும் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா்.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் யாழ் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லுாரி என்பவற்றில் கல்வி கற்கும் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.