சீனா செல்கிறார் கோட்டபாயா

சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளின் பயணம் மற்றும் நிதி உதவிகளைத் தொடர்ந்து சிறீலங்கா அதிபர் கோட்டபாய ராஜபக்சா சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளவுள்ள இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் பல உடன்பாடுகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அது தொடர்பான விடயங்கள் இந்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த உடன்பாடுகளில் பாதுகாப்புத்துறை உடன்பாடுகள் ஏதும் உள்ளதா என்பதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.