சீனாவில் இடம்பெற்ற பூமி அதிர்வில் 149 பேர் பலி

கடந்த வாரம் சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்வில் இதுவரையில் 149 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதனர்.

சீனாவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பூமி அதிர்வுகளில் இது மிகப்பெரிய பூமி அதிர்வாக கருதப்படுகின்றது. 6.2 புள்ளியளவான பூமி அதிர்வு அங்கு பதவிடப்பட்டுள்ளது. ஹன்சூ மன்றும் குயின்ஹாய் ஆகிய முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலேயே இந்த பூமி அதிர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் நாள் இடம்பெற்ற இந்த பூமி அதிர்வில் 200,000 வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும், 145000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 781 பேர் காயமடைந்துள்ளனர்.