சீனாவிலிருந்து சிறிலங்காவிற்கு நவீன இராணுவக் கருவிகள்

சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், அவசர தொலைத் தொடர்பு கருவிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் கருவிகள் போன்றவற்றை சீனா அனுப்பி வைக்கவுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு தேவைகளுக்காக சிறிலங்கா கண்காணிப்பு கருவிகளை சீனா வழங்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே சீனத் தூதுவர் செங் ஷியுவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்காவிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், சீனா உதவத் தயார் என்றும் பதிலளித்துள்ளார்.

எனினும் சீன இராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.