சீனாவிடமிருந்து நன்மைகளை பெறுவதற்காக இந்தியாவிற்கு சீற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் – கிரியெல்ல

சீனாவிடமிருந்து நன்மைகளை பெறுவதற்காக இந்தியா சீற்றமடையச்செய்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் ஆதரவில்லாமல் கொழும்புதுறைமுகநகர திட்டம் வெற்றியடையாது. இந்தியா பிராந்திய வல்லரசு. இந்தியாவிற்கு சீற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இது வெற்றியடையாது. கடந்தகாலத்தில் அரசியல் தலைவர்கள் இந்தியா சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணிணார்கள்.

எனினும் தற்போதைய அரசாங்கம் இலங்கையில் சீனாவின் பாரிய பிரசன்னத்திற்கு வழிவகுத்துள்ளது. இலங்கையின் வேறு எந்த தலைவரும் இவ்வாறான முடிவை எடுக்கவில்லை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.