சீனப் பாதுகாப்பு அமைச்சர் புறப்பட்டவுடன் பிரதமரை சந்தித்த இந்தியத் தூதுவர்

இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் தமது பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவுக்குப் புறப்பட்ட நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.