சிறைக் கைதிகள் ஐந்து பேர் உட்பட குடாநாட்டில் நேற்று 16 பேருக்குத் தொற்று

யாழ். ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 16 தொற்றாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

யாழ்.ஆய்வுகூடங்களில் நேற்று 396 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் குடாநாட்டை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். சிறைச்சாலையில் – ஐவர்

யாழ்.மாநகர சுகாதார அதிகாரி பிரிவு – நால்வர் (தொற்றாளர்களுடன் தொடர் பில் இருந்தவர்கள்)

சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவு – மூவர் (கைதடியில் இயங்கும் அரச திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தஇருவர்)

யாழ்.போதனா வைத்தியசாலை – மூவர் (தனிமைப்படுத்தல் விடுதியில் உள்ளவர்கள்)

கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்)