சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி சுமங்கல டயஸ்

சிறிலங்கா விமானப்படையின் தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி நாளை மறுதினம் ஓய்வுபெறவிருப்பதால், புதிய தளபதியாக விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஸல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.

நியமனத்திற்கான உத்தியோகéர்வ அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஓய்வுபெறவுள்ள எயார் மார்ஸல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் விமானப்படைத் தளபதியாக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக, ரவி விஜயகுணவர்த்தன, யாழ். காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.